தேசிய அளவிலான பயிற்சி பட்டறை

கள்ளகுறிச்சி தனியார் கல்லூரியில் வேதியியல் தொடர்பான தேசிய அளவிலனா பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Update: 2024-02-21 03:23 GMT

தேசிய அளவிலான பயிற்சி பட்டறை

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக பூனே பிரதிபா கல்லுாரி ஆராய்ச்சி தலைவரும், வேதியியல் துறை உதவி பேராசிரியருமான யோகேஷ்ஜோராபூர், தந்தை ஹான்ஸ்ரோவர் கல்லுாரி உதவி பேராசிரியர் ராமநாதன், பெங்களூரு ராமய்யா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரசுராமன் ஆகியோர் பங்கேற்று, மூலக்கூறு நறுக்குதலுக்கு தொடர்புடைய மென்பொருட்கள், கெம்ட்ரா- ஆட்டோடாக் பதிவிறக்கம் பயன்படுத்துதல் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் வெங்கடேசன், அங்கமுத்து, ராமர், மாரியப்பிள்ளை, சக்திவேல், ராஜதுரை ஆகியோர் செய்தனர். சங்கீதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News