அயோத்தி கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு  முன்னிட்டு  நவதானிய யாகம்

நாகர்கோவிலில் அயோத்தி கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு  முன்னிட்டு  நவதானிய யாகம் நடந்தது.

Update: 2024-01-22 11:37 GMT
யாகத்தை துவக்கிய முன்னாள் மத்திய அமைச்சர்
அயோத்தியில் இன்று ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளடிச்சிவிளை பகுதியில் பாஜக பொருளாளர் முத்துராமன் தலைமையில் விநாயகர் கோவிலில் ராமர் சீதா லக்ஷ்மன் சிலைகளை வைத்து ஓம குண்டங்கள் வளர்த்து ராமர் நாமத்தை சொல்லி நவதானியங்களால் பிரம்மாண்ட யாகம் இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ,இந்து மகா சபா மாநில தலைவர் தா.பாலசுப்பரமணியன், பாஜக மாநில மகளிர் அணி நிர்வாகி சவுதாமணி,  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்  1000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News