அங்காளபரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா
திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.;
Update: 2023-10-19 06:32 GMT
அங்காளம்மன்
திருச்செங்கோடு அருகேயுள்ள சத்தியநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அங்காள பரமேஸ்வரி துர்க்கை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.