நவரை சாகுபடி பணி - விவசாயிகள் தீவிரம்

சங்கராபுரம் பகுதியில் நவரை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-02-26 04:07 GMT

நெல் வயல் 

சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஏரி பாசனம், கிணற்று பாசனம், ஆற்று பாசனம் என முன்று போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஐப்பசி மாதம் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடைப் பணிகளை முடித்து தற்போது வயல்களை உழுது நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சங்கராபுரம் தாலுகாவில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நவரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News