திமுக சார்பில் வெள்ளி வாயல் ஊராட்சியில் நீர் மோர் பந்தல்

திமுக சார்பில் வெள்ளி வாயல் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-05-04 01:41 GMT

திமுக சார்பில் வெள்ளி வாயல் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.


மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளி வாயல் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு கோடை கால தாக்கத்திற்கு இளநீர், மோர், குடிநீர் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்த விழா ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் செய்திருந்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் முன்னிலையில் நடந்தது.

இதில் திமுக பொறுப்பாளர்கள் அன்புவாணன், மோகனசுந்தரம், ராமமூர்த்தி, கலைவாணன், ஜானகிராமன், கன்னிமுத்து, செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காட்டூர் காவல் நிலைய அருகே இளைஞர் அணி திமுக சார்பில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் டி.ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர், குளிர்பானங்களை வழங்கினார்.

இதில் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங், மணி, பாண்டுரங்கன், ஸ்டாலின், தேவராஜ் ஹரி, ராஜேஷ், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர் பந்தலை டி.ஜெ‌.கோவிந்தராசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Tags:    

Similar News