ராணிப்பேட்டையில் 347 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை!

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு செய்யும் முகாமில் புதிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வழங்கினார்.

Update: 2024-02-20 16:18 GMT

அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து பல்வேறு குறைபாடுகளுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு புதிய அடையாள அட்டை பதிவு செய்தனர். அதேபோல் அட்டைப் புதுப்பித்தல், மத்திய அரசுடைய தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து கொண்டனர். இந்த முகாமில் 347 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அஅட்டையினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News