புத்தாண்டு முன்னிட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

புத்தாண்டு முன்னிட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

Update: 2023-12-31 13:37 GMT
புத்தாண்டு முன்னிட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை திருமண மண்டபத்தில் புத்தாண்டு முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் புத்தாண்டு முன்னிட்டு பரிசுகளை பங்கு தந்தை மரியதாஸ், அலினா சில்க்ஸ் எஸ்.எ.பாபு அப்துல் சையத், ஆர்கே ஓட்டல் எம்.ராஜா, கிரேட் என்ஜிஒ சி.உமாமகேஸ்வரி ஆகியோர் வழங்கி வாழ்த்தினார்கள். முன்னதாக தூய்மை பணியாளர்கள் கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் கேக் மற்றும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். கடந்த ஏழு ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி புத்தாண்டு கொண்டாடி வருவதாக ஆசிரிய கணேசன் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி, கிருபாகரன், வெங்கடேசன், சம்பத் ஆகியோர் செய்து இருந்தார்கள்.
Tags:    

Similar News