புதுப்பெண் மரணம் : காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் சோகம்

சோளிங்கர் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-06-26 15:50 GMT

மரணம் 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் காலனியை சேர்ந்தவர் டிரைவர் வினோத் குமார் (30). இவரும் வேலூரை சேர்ந்த ஷாகிதா (26) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கொடைக்கல்லில் கணவர் வீட்டில் ஷாகிதா குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார்.

அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஷாகிதா மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாகிதா இறந்து விட்டார்.

இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருமணம் ஆகிய 6 மாதங்களே ஆவதால் அது குறித்து ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News