கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது;

Update: 2025-01-30 06:38 GMT
கைது
  • whatsapp icon
கஞ்சா வைத்திருந்தவர் கைது ஈரோடு, ஜன. 29- அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் நேற்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஆவின் பாலகம் ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கோவை, கணபதி, விஜயலட்சுமி லே-அவுட், 3வது கிராஸ் பகுதியை சேர்ந்த முத்துகணேஷ் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர், அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்

Similar News