தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா முன்னிட்டு 05.08.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தகவல்;
தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா முன்னிட்டு 05.08.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தகவல் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம், தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2025 செவ்வாய் கிழமை தூத்துக்குடி மாவட்ட முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negatiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 09.08.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.