செய்யாற்று படுகையில் இரவு நேர மணல் திருட்டு

செய்யாற்று படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2024-05-26 03:23 GMT

பைல் படம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஒதலவாடி கிராமத்தின் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் ஒதலவாடி பகுதிகளைச் சேர்ந்த சிலர் மாட்டு வண்டிகள் மூலம் இரவு நேரங்களில் ஆற்று மணலை திருட்டுத்தனமாக அள்ளிச் செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மாட்டு வண்டியில் மணலை திருடிச் சென்றனர்.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலாவுக்கும், சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News