திருமணமான 1½ மாதத்தில் வடமாநில வாலிபர் தற்கொலை !
சேலத்தில் திருமணமான 1½ மாதத்தில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-03 05:59 GMT
தற்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் வாச்சாராம மகன் நர்ஷாராம் (வயது 27). இவர் கடந்த சில வருடங்களாக சேலம் ரத்தினசாமிபுரம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது ஒரு பெண்ணுக்கும் கடந்த 1½ மாதத்திற்கு முன்பு ராஜஸ்தானில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பிறகு மனைவி அங்கேயே இருந்து உள்ளார். இவர் வேலைக்காக சேலம் வந்தார். பின்னர் வேலை பார்க்கும் இரும்பு கடையிலேயே தங்கி உள்ளார். நேற்று இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறில் மனம் உடைந்து நர்ஷாராம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.