தர்மபுரியில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம் அறிவிப்பு !

தேர்தல் நடத்த விதிமுறைகள் விலக்கப்பட்டதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம் அறிவித்துள்ளனர்.

Update: 2024-06-08 11:27 GMT

ஆட்சியர் கி.சாந்தி

இந்திய நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முடிவடைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததையடுத்து திங்கட்கிழமை தரும் நடைபெற்று வந்த பொதுமக்கள் மனு தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற ஆட்சியர் அலுவலகம் வெளியே பெட்டியில் மனுக்கள் அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள், 06 - 06 -2024 அன்று விளக்கிக் கொள்ளப்பட்டதால், வரும் 10.6.2024 திங்கட்கிழமை முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News