மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அணுமின் நிலைய ஊழியர் மரணம் !
மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அணுமின் நிலைய ஊழியர் மரணம் அடைந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-05 04:26 GMT

மரணம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இன்று (ஜூலை 5) மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராதாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.