நர்சிங் மாணவி மாயம் போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் நர்சிங் மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-13 04:18 GMT

பெண் மாயம் 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய மாணவி. இவர் சென் னையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விடுமுறைக்காக வீட்டில் இருந்து வந்த மாணவி சம்பவத்தன்று திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News