அருமனை அருகே குட்கா பறிமுதல் முதியவர் கைது
அருமனை அருகே பெட்டிக்கடை நடத்திவரும் நபர் குட்கா விற்பனை செய்த நிலையில் போலீசார் குட்காவை பறிமுதல் செய்து கைது செய்யபட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 07:13 GMT
குட்கா பறிமுதல் முதியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த இடைக்கோடு செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (63) அந்த பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அருமனை காவல் நிலைய தனிப்படை போலீசார் இடைக்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெட்டிக்கடை நடத்திவரும் கணேஷின் நடவடிக்கையில் போலீஸ் சர்வீஸ் சந்தேகம் ஏற்பட்டு, அவரை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அவர் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.