முதியவர் சடலம் - காவல்துறையினர் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம்,கொன்னம்பட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதியவர் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-30 09:56 GMT

சடலம் மீட்பு 

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கொன்னை கண்மாய் கரையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News