தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-05-15 13:33 GMT

பைல் படம் 

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடைக்கு நேற்று முன்தினம் இரவு 8.05 மணிக்கு கோவை-சென்னை சென்டிரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பின்னர் ரெயிலில் பயணிகள் ஏறியதும் 5 நிமிடத்தில் அங்கிருந்து ரெயில் புறப்பட்டது. அப்போது நடைமேடை முடியும் இடத்தில் சுமார் 65 வயதுடைய முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் திடீரென படுத்து கொண்டார். பின்னர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Advertisement

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவர் அணிந்திருந்த சட்டை காலரில் திருப்பூரில் உள்ள ஒரு டெய்லர் பெயர் இருந்தது தெரியவந்தது. இதனால் இறந்த முதியவர் திருப்பூரை சேர்ந்தவரா? எனவும், அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? எனவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News