கடும் வெயில் காரணமாக முதியவர் உயிரிழப்பு

வேடசந்தூர் ஆத்துமேட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று மாலை கடும் வெயில் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Update: 2024-04-12 09:00 GMT

பைல் படம்

வேடசந்தூர் ஆத்துமேட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அங்குள்ள நிழற்குடையில் தங்கி இருந்து யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று மாலை கடும் வெயில் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணையில் இறந்தவர் நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என தெரிய வரவே அவரது உறவினர்களை வரவழைத்து போலீசார் உடலை ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News