அரசு பேருந்து மோதி முதியவர் காயம் - போலீசார் வழக்கு பதிவு

நாகை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் காயம் வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Update: 2024-02-09 06:16 GMT

அரசு பேருந்து மோதி முதியவர் காயம் - போலீசார் வழக்கு பதிவு 

நாகை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் காயம் வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. திண்டிவனம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் வயது 74 இவர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில் நாகை வெளிப்பாளையத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி சந்திரசேகரன் இடது காலில் பலத்த காயமடைந்தார் அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சந்திரசேகரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பிப்ரவரி 8 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு போலீசார் அரசு பேருந்து ஒட்டி வந்த திருமருகல் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நந்தகுமார் வயது 50  என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News