வாகனம் மோதி முதியவர் பலி;போலீஸ் விசாரணை

நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அருகாவூரை சேர்ந்த முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-25 11:07 GMT

நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அருகாவூரை சேர்ந்த முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News