சேலத்தில் ஏ.சி. எந்திரத்தில் தீப்பிடித்து முதியவர் படுகாயம்

சேலத்தில் ஏ.சி. எந்திரத்தில் தீப்பிடித்து முதியவர் படுகாயம் அடைந்தார்

Update: 2024-01-22 10:19 GMT


பைல் படம்


சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி அருகே உள்ள குருக்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 80). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் படுகாயம் அடைந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அருணாசலத்தை மீட்டு சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News