திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெஞ்ச்,டெஸ்க் வழங்கினர்

திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பெஞ்ச்,டெஸ்க் வழங்கினர்.

Update: 2024-03-01 07:40 GMT
திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெஞ்ச்,டெஸ்க் வழங்கினர்

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் முன்னாள் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாட சாமி தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.1996-1997ம்ஆண்டு 12 வகுப்பு (பிளஸ்டு) கணித பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர் கள் தங்கள் பங்களிப்புடன், திருவேங்கடம் பேரூராட் சியின் நமக்கு நாமே திட் டம் 2022 2023 ன் கீழ் ரூபாய் 7லட்சம் மதிப்புள்ள பெஞ்ச், டெஸ்க் மற்றும் டேபிள்களை ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் சுபா லட்சுமி முன்னிலையில் திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் நாலாட்டின்புத்தூர் காவல் ஆய் வாளர் சுகாதேவி, வீரசிகா மணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசி ரியை சுப்பாலட்சுமி, திரு வேங்கடம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் இதயா, ஆசிரியர்கள் ஜெயராஜ், காளிராஜ், இளங்கோவன் இசை வாணி, வேலுத்தாய், பகவதி ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஏற்பாடு களைமுன்னாள் மாணவர் கள் காளிராஜ், நெல்லை நாயகம், குமார், சீனிவாசன், ஆகியோர் செய்திருந்தனர். உதவி தலைமைஆசிரியர் பொன்னிருளாண்டி நன்றி கூறினார்.

Tags:    

Similar News