சீதேவிமங்கலத்தில் விஷம் குடித்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் விஷம் குடித்த திருமணமாகாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

Update: 2024-04-03 09:01 GMT

பைல் படம்

மண்ணச்சநல்லூர் அருகே சீதேவி மங்கலம் அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான ரமேஷ். இவரது மனைவியின் உறவினர் 75 வயதான ருக்குமணி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 10 வருடமாக ருக்குமணி சீதேவிமங்கலத்தில் உள்ள ரமேஷ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 31 ம் தேதி இரவு சுயநினைவு இல்லாத நேரத்தில் தவறுதலாக ருக்குமணி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News