கார் மோதி மூதாட்டி பலி!
கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 06:04 GMT
பலி
விராலிமலை ஒன்றியம் ராமகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி மனைவி ராஜம்மாள்(70) நேற்றுமுன்தினம் இரவு மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமக்கவுண்டம்பட்டி பிரிவுசாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த ராஜம்மாள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.