கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நாளை முத்தமிழ்தேர் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தல்..!
By : King 24X7 News (B)
Update: 2023-11-16 16:10 GMT
மாவட்ட ஆட்சியர்
கலைஞர் நூற்றாண்டு விழாவை நினைவுபடுத்தும் வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலை அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் முத்தமிழ்தேர் என்ற அலங்கார ஊர்தி நாளை மாவட்டத்தில் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் முத்தமிழ்தேர் பயணிக்கும் திருவாரூர் மாவட்டத்திற்கு குறைந்தது 100 மரக்கன்றுகள் நடத்திட்டமிடப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்