குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது !

திருச்சியில் கஞ்சா விற்ற ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Update: 2024-07-04 04:58 GMT

குண்டா் தடுப்புச் சட்டம்

கண்டோன்மென்ட் வ.உ.சி. சாலையில் கஞ்சா விற்ற ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அச்சங்குளத்தைச் சோ்ந்த சு. செல்வம் (54) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்த கண்டோன்மென்ட் போலீஸாா், அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். இவரது குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, செல்வத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்.
Tags:    

Similar News