திண்டுக்கல்லில் இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் விஜயகுமார் அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளனர்.

Update: 2024-05-29 12:12 GMT
நீதிமன்ற புறகணிப்பில் ஈடுபட்ட வக்கீல்கள்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் விஜயகுமார் அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை வடமதுரை காவல்துறையினரை கைது செய்யாததால் அதை கண்டித்தும் உடனடியாக குற்றவாளியை கைது செய்யக் கோரியும் இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளனர்.

மேலும் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News