ராமநாதபுரம் விபத்தில் ஒருவர் பலி

சாயல்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து ஒருவர் பலி, இரண்டு பேர் படுகாயம்

Update: 2024-07-04 09:28 GMT
சாயல்குடி - நரிப்பையூர் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை 3 மணியளவில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார். தெற்கு நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்களான பக்கீர் மகன் ரகுமான், நாகூர்கனி மகன் சாகுல், பக்கீர் மஸ்தான் மகன் நாசர் ஆகியோர் ஒரே பைக்கில் மீன்பிடி தொழிலுக்காக மூக்கையூர் துறைமுகம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கோவில்பட்டியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொகுசு வேனில் இராமேஸ்வரம் செல்வதற்காக வந்துள்ளனர். இவர்களின் வேன் நரிப்பையூரை கடந்து செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக்மீது பலமாக மோதியதில் பைக்கில் சென்ற மூன்றுபேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி விரைந்து வந்த சாயல்குடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ரகுமானுக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரையும் மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரிடம் விபத்து குறித்து சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது எர்ஷாத் தலைமையிலான போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News