நெல்லையில் மேலும் ஒரு தீயணைப்பு நிலையம்: முதல்வர் அறிவிப்பு

நெல்லையில் மேலும் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளர்.

Update: 2024-06-30 16:24 GMT

முதல்வர்

நெல்லை மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை மற்றும் பேட்டை பகுதிகளில் மட்டும் தான் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில் மாநகர பகுதி விரிவாகி வருவதால்,

அவசர தீ தடுப்பு பேரிடர் மீட்பு பணிகளுக்கு குறித்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலை கடந்து உரிய இடத்துக்கு செல்வது சவாலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாநகர பகுதியில்,

மேலும் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News