பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த கருப்பூர் குள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சாரதி என்பவரை ஓமலூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2024-05-30 06:16 GMT

பைல் படம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் பன்னீர்செல்வம் (வயது 25). இவரும், பொட்டியபுரம் ஆசாரிப்பட்டறை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சேட்டு மகன் விஸ்வநாதன் (23) என்பவரும் மோதிக்கொண்டனர். அப்போது மாறி மாறி இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்போது 7 பேரை கைது செய்தனர். இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த கருப்பூர் குள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சாரதி (19) என்பவரை ஓமலூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News