திருவாரூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருவாரூரில் தொடர் ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-12 15:47 GMT

பைல் படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் நகர் பகுதியில் தொடர்ந்து ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த திருவாரூர் மடப்புரம் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மகன் விஜய் என்கிற புறா விஜய் வயது 28 என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் . அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததன் பேரில்,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News