லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு காவல் துறையினர் விசாரணை

Update: 2024-06-12 02:22 GMT

விபத்து 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் லாரி டிரைவர். இவர் நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது கெரகோடள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் பாராதவிதமாக பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பரமசிவன் காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News