வெடி விபத்தில் ஒருவர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-25 06:36 GMT

தீ விபத்தில் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகில் உள்ள மேல ஒட்டம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ரவீந்திரா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.நாக்பூர் லைசன்ஸ் பெற்று சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் இன்று மருந்து கலவை தயார் செய்தபோது உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்த நிலையில் மருந்து கலவையில் ஈடுபட்டிருந்த சிவகாசி அருகில் உள்ள அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் வயது 21 என்பவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வெடி விபத்தில் சிக்கிய அஜித்குமார் உடலை மீட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News