திருமானுரில் நூலக அமையவுள்ள இடத்தினை கலெக்டர் ஆய்வு செய்ய மனு

திருமானுரில் நூலக அமையவுள்ள இடத்தினை கலெக்டர் ஆய்வு செய்ய மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 08:30 GMT

மனு அளித்தவர்கள்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் நூலக ஆணைக்குழு மூலம் 1 கோடி மதிப்பீட்டில் கிளை நூலகம் அமைக்க முடிவெடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களான பாளை. திருநாவுகரசு மற்றும் பாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தனர்.

அந்த மனுவில் கிளை நூலகம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதில் பல குழப்பங்கள் நிகழ்வதாகவும், எனவே மாவட்ட ஆட்சியரே, கிளை நூலகம் அமைப்பதற்கான இடத்தினை நேரில் ஆய்வு செய்திட வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது.

இதனையடுத்து அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவை சந்தித்து வழங்கபட்டது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News