கோடங்கிபட்டி அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல் !

கோடங்கிபட்டி அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-03-21 12:26 GMT

மருத்துவமனை

கோடங்கிபட்டி அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, ஆட்சிமங்கலம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி வயது 50. இவர் மார்ச் 20 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கோடங்கிபட்டி நால்ரோடு அருகே வந்தபோது, எதிர்திசையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, கதிராம்பட்டி அருகே உள்ள புதுமோட்டூர் பகுதியைச் சேர்ந்த சையது மகன் சஜத் வயது 26 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார்,வையாபுரி ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த வையாபுரிக்கு, தலை, வலது கால், மூக்கு, காது உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வையாபுரி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சஜத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Tags:    

Similar News