சங்கரன்கோவிலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைப்பு

சங்கரன்கோவிலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2024-05-29 08:57 GMT
சங்கரன்கோவிலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான இரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் மது அருந்துவதற்காக பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து,

வந்த ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் அடிதடி வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தில்,

சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து முற்றவாளி சுரேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News