வாகனம் புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஒருவர் படுகாயம்!
வாகனம் புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.
Update: 2024-07-16 05:23 GMT
கந்தர்வகோட்டை அருகே செங்கிப்பட்டி சாலையில் திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி காய்கறி ஏற்றி வந்த வாகனம் புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநர் சீனிவாசன் காயமடைந்தார். இதனை அடுத்து அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.