ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

முத்துப்பேட்டை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-04 06:02 GMT

கோப்பு படம் 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆலங்காடு பேருந்து நிறுத்தம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பேட்டை உப்பூர் ,காசடி கொல்லை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் சுவாமிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News