ஒக்கூர் ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா

கீழ்வேளூர் அருகே ஒக்கூரில் ரூ.23 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-07-03 08:07 GMT

 ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சி மன்றத்திற்கு இந்திரா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்ஜெயமாலா ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜகோபால், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை வட்டார ஆத்மா குழு தலைவரும், ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் பாலச்சந்தர், ரமேஷ், உதவி பொறியாளர் தர்மராஜ், ஒன்றிய திமுக நிர்வாகிகள் வேதநாயகம், நடராஜன், ரவிக்குமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவிகாகோசிமணிமற்றும் ஒக்கூர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News