விட்டலாபுரத்தில் நாடகமேடை திறப்பு

விழுப்புரம் மாவட்டம் விட்டலாபுரம் கிராமத்தில் ரூ. 8 லட் சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-14 04:29 GMT

விழுப்புரம் மாவட்டம் விட்டலாபுரம் கிராமத்தில் ரூ. 8 லட் சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டப்பட்டு, திறப்பு விழா நடை பெற்றது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டலாபுரம் கிராமத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 8 லட் சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டப்பட்டு, திறப்பு விழா நடை பெற்றது. இதற்கு ரவிக்குமார் எம்.பி. தலைமை தாங்கி, நாடக மேடையை திறந்து வைத்தார். திண்டிவனம் நகர்மன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றி வேல், ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தீபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி வட கிழக்கு மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, நிர்வாகிகள் லட்சுமிகாந்தன், தமிழரசன் துரை, ஆனந்தராஜ், துரை.வெங்கட் பிரபு, வாசு, தீயுருவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News