காவல் நிலையத்தில் சிறுவர்கள் பூங்கா திறப்பு

சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவர்கள் பூங்காவை நகர் மன்ற தலைவர் திறந்து வைத்தார்

Update: 2024-03-13 12:51 GMT

சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவர்கள் பூங்காவை நகர் மன்ற தலைவர் திறந்து வைத்தார்


சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வராபவர்களின் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களின் மன அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளின் மன அழுத்தத்தை மாற்றும் விதமாக சிறுவர் பூங்கா அமைக்க அறிவுறுத்தினார்.

இதன்படி முதற்கட்டமாக சிவகங்கை நகர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் சாலை பகுதியில் அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை சிவகங்கை நகரமன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை நகர் காவல் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் இந்த புதிய முயற்சியினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News