தென்பூண்டி பட்டில் நியாயவிலை கடை திறப்பு

செய்யாறு அருகே தென்பூண்டிபட்டு, பரதந்தாங்கல் கிராமத்தில் ரூ.9.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.

Update: 2024-02-29 05:48 GMT

திறப்பு விழா 

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தென்பூண்டிபட்டு ஊராட்சி பரதந்தாங்கல் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 09 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவு நியாய விலை கடை கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார் இந்நிகழ்வில் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல் அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் தேவி ஏழுமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் சுகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News