காட்டுமன்னார்கோவில்: உழவர் சந்தை திறப்பு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் உழவர் சந்தையை அமைச்சர் திறந்து வைத்தார்.;
Update: 2024-02-07 01:17 GMT
உழவர் சந்தை திறப்பு
கடலூர் மாவட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை 2021 - 2022ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையின்படி ரூ.45.33 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள காட்டுமன்னார்கோயில் உழவர் சந்தையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் ஆட்சியர் அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கலந்து கொண்டனர்.