திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2024-06-21 10:04 GMT
பைல் படம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) பவுர்ணமியை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதை முன்னிட்டு பக்தர்களின் வச திக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத் தின் சார்பில் இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூர், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சீபுரம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாம லைக்கு 150 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வார இறுதியான இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) ஆகிய நாட்களில் அரசு பஸ் களில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்வார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொது மக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச லம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்க ளுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக் குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக் கப்பட உள்ளது.அதன்படி இன்று 425 பஸ்களும், நாளை 215 பஸ்களும் ஆக மொத்தம் 640 சிறப்பு பஸ்கள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரி (வழி இசிஆர்), திருவண்ணாமலை (வழி- ஆற் காடு, ஆரணி), திருவண்ணாமலை (வழி- காஞ்சீ புரம், வந்தவாசி) ஆகிய இடங்களுக்கு கூடுத லாக இன்று 15 பஸ்களும், நாளை 40 பஸ்களும் என மொத்தம் 55 பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பஸ்களை இயக் கவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திட வும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News