ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு - நகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்

பாரதிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்களால் அகற்றினர். அப்போது வியாபாரிகள் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-05-30 04:22 GMT
தர்மபுரி பாரதிபுரம் பகுதியில் சாலை ஓர கடைகள் செயல் பட்டு வருகின்றன. இந்த கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக வந்த நகராட்சி ஊழியர்களை சாலை ஓரங்களில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்தப்படும் சாலையோர கடைகளை அகற்றக் கூடாது. முன் அறிவிப்பின்றி இத்தகைய நடவடிக்கையை எடுக்கக்கூடாது. சாலை ஓரங்களில் கடைகள் நடத்தி வருபவர்களின் குடும்பங்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக் கைகளை எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த நகராட்சி வாகனத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News