ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு - மனு கொடுக்கும் போராட்டம்

Update: 2023-12-15 04:06 GMT

மனு கொடுக்கும் போராட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஸ்மார்ட் மீட்டர் மின் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி திருக்கோவிலுார் மின்வாரிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. ஸ்மார்ட் மீட்டர் மின் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், வரும் காலங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சார திட்டம் பறிக்கப்படும் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவிலுார், ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேல்மாறன் தலைமை தாங்கினார்.
Tags:    

Similar News