CITU சங்கம் சார்பில் பெரம்பலூர் கிளை பணிமனை முன்பு வாயிற் கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக CITU சங்கம் சார்பில் வரும் மே 14ம் தேதி நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு போராட்டத்தை குறித்து விளக்க வாயிற் கூட்டம் பெரம்பலூரில் நடைப்பெற்றது.

Update: 2024-05-07 01:06 GMT

CITU சங்கம் சார்பில் பெரம்பலூர் கிளை பணிமனை முன்பு வாயிற் கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக CITU சங்கம் சார்பில் சர்வாதிகாரியாக செயல்படும் கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குநர் மகேந்திர குமாரை கண்டித்து வரும் மே. 14 ந் தேதி கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தை குறித்து விளக்க வாயிற் கூட்டம், பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் பெரம்பலூர் கிளை பணிமனை முன்பு நடைபெற்றது,

கிளைச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த வாயிற் கூட்டத்தில் , போக்குவரத்து கழகத்தில் மேலாண் இயக்குனரின் சர்வாதிகாரப் போக்கையும் அதனை முன்னிட்டு தொழிற்சங்கம் சார்பில் மேலாண் இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறியீடு செய்வது குறித்தும் எடுத்துரைத்து, இந்த பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந் நிகழ்ச்சியின் போது சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News