அர்ச்சகர் பணிக்கு நியமன ஆணை: கே ஆர் என் ராஜேஷ்குமார் வழங்கினார்

Update: 2024-08-17 07:11 GMT

கே ஆர் என் ராஜேஷ்குமார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அர்ச்சகர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணையை மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் இத்திருக்கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடத்திற்கு 29.06.2024 அன்று நடைபெற்றது. நேர்காணலில் கலந்து கொண்டு அர்ச்சகர் பணியிடத்திற்கு தேர்வு பெற்ற திரு.உ.ஸ்ரீ மதுதில்லைநாதன் என்பவரை அர்ச்சகர் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து இராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அர்ச்சகர் பணியிடத்திற்கு திரு.உ.ஸ்ரீ மதுதில்லைநாதனுக்கு பணி நியமன ஆணையை மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் வழங்கினார்.

Tags:    

Similar News