அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஓஎஸ் மணியன் அறிவுரை !!

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓ எஸ் மணியன் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.

Update: 2024-06-01 10:35 GMT

 ஓஎஸ் மணியன் அறிவுரை

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம், அதிமுக அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

  வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே செல்லும் அதிமுக முகவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தை பிரித்து எண்ண ஆரம்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் ஒவ்வொரு சுற்று முடிவிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் P.V.பாரதிமோகன், அதிமுக வேட்பாளர் பி. பாபு மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் நகராட்சி செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள் பிற அணி பொறுப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய மடலை வாசித்துக் காண்பித்து விழிப்புணர்வுடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News